440 மெற்றிக் தொன் அரிசியை இந்தியாவில் இருந்து இறக்குமதி


2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி முதல் 440 மெற்றிக் தொன் அரிசியை இந்தியாவில் இருந்து தனியார் துறை இறக்குமதி செய்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இன்று காலை வரை 17 இறக்குமதி கொள்கலன்கள் சுங்கத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவை ஏற்கனவே விடுவிக்கப்பட்டன. 

இந்த 17 இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் சுமார் 1,900 மெற்றிக் தொன்கள் உள்ளதாகவும் அதில் 130 மெற்றிக் தொன் பச்சை அரிசியும் 300 மெற்றிக் தொன் புழுங்கல் அரிசியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 

இந்த இறக்குமதிகள் அனைத்தும் இந்தியாவில் இருந்து வந்தவை. இந்த அரிசியை சுங்கத்தில் இருந்து விரைவில் அகற்றி பொதுமக்களுக்கு வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்றை இலங்கை சுங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

No comments