2022ஆம் ஆண்டு மாவீரர்நாள் தொடர்பிலும் விசாரணை


2022ஆம் ஆண்டு இடம்பெற்ற மாவீரர்தின நினைவேந்தல் தொடர்பிலும் பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரிடம் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவரும், பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் உறுப்பினருமான ப.சுரேஷிடமே நேற்றைய தினம் புதன்கிழமை நான்கு மணிநேரம் இவ்வாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரியவருகின்றது

No comments