மாலை தலைவர் கடவுள்:காலை அரச பாதுகாப்பு!
தனது கடவுள் என்று கூறி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு முகநூல் பிரபலம் அர்ச்சுனா ராமநாதன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
"நாங்கள் இனவாதிகள் அல்ல. நாங்கள் இலங்கைத் தமிழர்கள். இந்த மாதம் போரின்போது உயிரிழந்த உயிர்களை நினைவுகூர்கிறோம். நான் சிங்கள மக்களுக்கு எதிரானவன் அல்ல, எங்களைக் கொன்ற சிங்கள அரசுக்கு மட்டுமே எதிரானவன் என்று என் கடவுள் பிரபாகரன் கூறியுள்ளார்" என்றும் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை இலங்கையின் 10வது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது தனது செயற்பாடுகள் காரணமாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அர்ச்சுனா இராமநாதன் தனிப்பட்ட பாதுகாப்பை கோரியுள்ளார்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து கொண்டு நகர மறுத்துவிட்டார்,
இந்நிலையில் நாடாளுமன்ற ஆசனத்தில் நடந்த சம்பவத்தால் என்னால் வீதியில் நடக்கக்கூட முடியவில்லையென தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பொது பாதுகாப்பு அமைச்சிடம் எழுத்துமூலக் கோரிக்கையை முன்வைத்து தனிப்பட்ட பாதுகாப்பினை பெறவேண்டும் என நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment