சசிகலாவின் சின்னத்தை மாற்றி போலி சுவரொட்டிகள்


நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் சசிகலா ரவிராஜின் சின்னத்தை மாற்றி அச்சிட்டு தென்மராட்சி பகுதிகளில் போலி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இம்முறை தேர்தலில் சசிகலா ரவிராஜ் சங்கு சின்னத்தில் விருப்பு இலக்கு 07 இல் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். 

இந்நிலையில் சசிகலா ரவிராஜ் வீட்டு சின்னத்தில் விருப்பு இலக்கம் 07 இல் போட்டியிடுவதாக போலி சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு தென்மராட்சி பகுதிகளில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு ஒட்டப்பட்டுள்ளன. 

குறித்த விடயம் தொடர்பில் சசிகலா ரவிராஜை தொடர்பு கொண்டு வினவியபோது, மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் குறித்த விடயம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசனம் வெளியிட்டார்.

அத்துடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சாவகச்சேரி தொகுதியைச் சேர்ந்த சிலரினால் குறித்த செயல் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளார். 


No comments