யாழில். 2ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, 2 ஆயிரத்து 40 குடும்பங்களைச் சேர்ந்த 7ஆயிரத்து 436 பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் டிஎன் சூரியராஜா தெரிவித்தார்.  

தொடர் மழை காரணமாக தாழ்நிலைப் பிரதேசங்கள் மற்றும் கரையோர பிரதேசங்களை அண்டி வாழும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த சீரற்ற காலநிலை காரணமாக, 12 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்பு உணரப்பட்டுள்ளது.

.சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, உடுவில், கோப்பாய், சண்டிலி பாய், யாழ்ப்பாணம், நல்லூர், பருத்தித்துறை, சங்கானை, காரை நகர், நெடுந்தீவு , தெள்ளிப்படை பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த பாதிப்பு உணரப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

No comments