மண்சரிவு அபாய எச்சரிக்கை !


சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதன்படி பதுளை,  கண்டி,  மாத்தறை,  நுவரெலியா, காலி ,  களுத்துறை,  கேகாலை,   இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு  அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. 

சீரற்ற வானிலை காரணமாக மலையக பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் வீதிகளை பயன்படுத்தும் சாரதிகளும் அவதானமாக இருக்குமாறும்  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments