துப்பாக்கி சூட்டில் பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு


அம்பலாங்கொடை - உரவத்த பிரதேசத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீதும் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments