பெபனான் இன்னொரு காசாவாக மாறும் - நெதன்யாகு எச்சரிக்கை!


லெபனான் மக்கள் தங்கள் நாட்டை ஹிஸ்பொல்லாவிடம் இருந்து விடுவிக்காவிட்டால்,  காசாவில் நாம் பார்ப்பது போன்ற அழிவையும் துன்பத்தையும் சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

லெபனான் மக்களுக்காக அவர் காணொளி ஒன்றை வெளியிட்ட போது அதில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

லெபனான் மக்களே, நான் உங்களுக்குச் சொல்கிறேன். உங்கள் நாட்டை ஹிஸ்பொல்லாவிடம் இருந்து விடுவிக்கவும் , இதனால் இந்தப் போர் முடிவுக்கு வரும் என்று கூறினார்.

ஹிஸ்பொல்லாவுக்கு ஆயுதம் மற்றும் நிதியுதவி செய்யும் ஈரான், லெபனானை வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களின் கையிருப்பின் முன்னோக்கி ஈரானிய இராணுவ தளமாக மாற்றியுள்ளது என்று நெதன்யாகு கூறினார்.

இஸ்ரேலின் எதிரான தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்த ஹெஸ்பொல்லா பல ஆண்டுகளாக இருந்ததை விட பலவீனமாக உள்ளது என்றும் லெபனான் மக்கள் இப்போது புரிந்திருக்கும் என அவர் கூறினார்.

No comments