சிங்கள தேசம் திருந்த போவதில்லை!



வடக்கு கிழக்கு ஆக்கிரமிப்புக்களுக்கு இரண்டு பிக்குகள் தலைமை  தாங்குகின்றார்கள் .இதில் பாணமுரே திலகவன்ச தேரர் திருகோணமலை அரிசிமலை பகுதியிலிருந்து இயங்குகின்றார் 

வடக்கு கிழக்கு பௌத்த சங்கத்தின் தலைவர் என பாணமுரே திலகவன்ச இருந்துவருகிறார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவின் கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியின் உறுப்பினராகவும் பாணமுரே திலகவன்ச பணியாற்றி  இருந்தார் 

இந்த தேரருக்கு அமைச்சரவை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஆயுதங்களையும் அவர் வைத்து கையாண்டு வருகின்றார் 

2010 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டையிலிருந்து திருகோணமலையில்  குடியேறிய பாணமுரே திலகவன்ச தேரர் ஆயிரக்கணக்கான காணிகளை அபகரித்து உள்ளார் 

பல நூறு  பௌத்த மத கட்டமைப்புகளை திருகோணமலை எங்கும் நிறுவி இருக்கின்றார் 

புனித பூமி திட்டத்தின் கீழ் பல நூறு ஏக்கர் விவசாய காணிகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றார்

இது போதாதென்று தனியார் நிலங்களை ஆக்கிரமித்து  சிங்கள குடியேற்றங்களை செய்து வருகின்றார் 

மறுபுறம் வடக்கில் குருந்தூர்மலை,வெட்டுக்குநாறி மலை, வவுனியா சிங்களகுடியேற்றம் உட்பட்ட ஆக்கிரமிப்புகளுக்கு கல்கமுவ சாந்தபோதி தேரர் தலைமை தாக்குகின்றார் 

2014 ஆம் ஆண்டவில் வன்னியில்  குடியேறிய கல்கமுவ சாந்தபோதி தேரர் 'வடக்கு எங்களின் உரித்து' என்கிற சமூக தள பக்கங்களை இயக்கி வருகின்றார் 

வவுனியா வடக்கு ஆக்கிரமிப்புகளை முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று சிங்கள குடியேற்றங்கள் வரை விரிவாக்கும் நோக்கில் இயங்கி வருகின்றார் 

அதாவது தமிழ் சமூகத்தின் நில தொடர்ச்சியை சிதைத்து வவுனியாவிலிருந்து கொக்கிளாய் முகத்துவாரம் வரையில் தனியான நிர்வாக அலகு கொண்ட சிங்கள குடியேற்றத்தை உருவாக்க முயலுகின்றார்

தண்ணிமுறிப்பு ,குமுளமுனை கிராமத்தை சேர்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான பல வயல் காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது இவர் தடுத்து வருகின்றார் 

உண்மையில் வடக்கு கிழக்கின் பல தமிழ் பகுதிகளில் குடியேற்றப்பட்டு ஆக்கிரமிப்புகளுக்கு  துணை போகும் பல டசின் பிக்குகளுக்கு  இவர்கள் தான் தலைமை தாங்குகின்றார்கள்

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் இவர்கள் இருவர் மீதான பல்வேறு முறைப்பாடுகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன

ஆனால் நேற்று புல்மோட்டையில் தமிழ் மக்களின் விவசாய  நிலங்களுக்குள்  புகுந்து பாணமுரே திலகவன்ச தேரர் தரப்பினர் மிக மோசமாக தமிழ் விவசாயிகளை அச்சுறுத்தி இருந்தனர். இந்த நிமிடம் வரை எந்த நடவடிக்கையும் இல்லையென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 


No comments