வடக்கிற்காக குரல்கொடுக்க 819பேர் வீதியில்!
வடமாகாணத்தில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 819பேர் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.
அதேவேளை நாடாளுமன்றத் தேர்தலுக்காக யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் சுயேட்சைக் குழுக்களின் 6 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
யாழ் தேர்தல் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் 46 வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
வேட்புமனு தாக்கலுக்கான காலக்கெடு இன்று (11) நண்பகல் நிறைவடைந்த நிலையில் வேட்புமனுக்கள் தொடர்பாக ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலில் இம்முறை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 44 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் களமிறங்கவுள்ளன.
இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுன, கே.வி.தவராசா தலைமையிலான தமிழரசு மாற்று அணி மற்றும் அங்கஜன் இராமநாதனின் கட்சியென 46 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தன.அவற்றில் இரண்டு சுயேட்சைக்குழுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை வன்னி தேர்தல் தொகுதியில் 6 உறுப்பினர்களுக்காக 423 வேட்பாளர்கள் போட்டியிடுவதற்காக 24 அரசியல் கட்சிகள் மற்றும் 27 சுயேச்சை குழுக்கள் உள்ளடங்களாக 51 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.அவற்றில் 47 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட ஏனையவை நிராகரிக்கப்பட்டிருந்தது.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதிpல் 6 உறுப்பினர்களை தெரிவு செய்ய 423 பேர் போட்டியிடுகின்றனர்.
Post a Comment