சிறை கைதிகள் தப்பியோட்டம் - மூவர் பணியிடை நீக்கம்




அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நான்கு கைதிகள் கடந்த முதலாம் திகதி தப்பிச் சென்றதைத் தொடர்ந்து அங்கு கடமையில் இருந்த மூன்று அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

வெளி வளாகத்தை சுத்தம் செய்வதற்காக பத்து கைதிகளை வெளியில் அழைத்துச் செல்ல தலைமை சிறைச்சாலை அதிகாரி ஏற்பாடு செய்திருந்தார்.

இதன் போது நான்கு கைதிகள் தப்பி சென்றுள்ளனர். 

தப்பியோடிய கைதிகளில் நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களும் உள்ளனர், அவர்களில் ஒருவருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் மேலும் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தப்பியோடிய கைதிகளில் மூவர்  மீள கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

No comments