பேஜர் உற்பத்தி செய்யும் இடத்திலேயே 3 கிராம் வெடிமருந்து வைத்தது மொசாட்!
பேஜர் வெடிப்பு சம்பவத்தில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே 5 ஆயிரம் பேஜர்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளனர்.
தைவானை சேர்ந்த கோல்ட் அப்பலோ என்ற நிறுவனம் இந்த பேஜர்களை தயாரித்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த பேஜர்களை நாங்கள் தயாரிக்கவில்லை என்றும் ஐரோப்பாவில் உள்ள ஒருநாட்டில் தங்கள் பெயரை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள பிஎசி என்ற நிறுவனம் இந்த பேஜர்களை தயாரித்துள்ளதாக கோல்ட் அப்பலோ தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பேஜர்கள் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த பேஜர் மூலம் மெசேஜ் மட்டுமே அனுப்ப, பெற முடியும், பேச முடியாது.
இந்த பேஜரில் இஸ்ரேலின் மொசாட் அமைப்பினர் வெடிக்கும் போர்டு கருவி ஒன்றை பொருத்தியுள்ளனர். அதில், 3 கிராம் அளவிற்கு வெடிமருந்தை நிரப்பியுள்ளனர். பேஜர்கள் உற்பத்தி செய்யப்பட்ட இடத்திலேயே வெடிமருந்து நிரப்பப்பட்டுள்ளது.
பேஜரில் கடவுச்சொல் (Code) வந்த உடன் வெடிக்கும் வகையிலான போர்டு கருவியை மொசாட் பொருத்தியுள்ளது. 3 ஆயிரம் பேஜர்களில் இந்த வெடிக்கும் போர்டு பொருத்தப்பட்டுள்ளது.
Post a Comment