யேர்மனியில் வாழைப்பழப் பெட்டிகளில் கொக்கேயின்: நோர்த்-ரைன்-வெஸ்ட்பாலியா நகரங்களில் கண்டுபிடிப்பு!
யேர்மனி நாட்டில் பல்பொருள் அங்காடி வாழைப்பழப் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 மில்லயன் யூரோக்கள் பெறுமதியான 95 கிலோ கிராம் எடைகொண்ட கோகேயின் பொதிகள் கண்டு பிடிக்கப்பட்டன.
நோர்த்-ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தின் பல நகரங்களில் உள்ள கடைகளில் கோகோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். எனினும் பல்பொருள் அங்காடிக்கு வாழைப்பழங்களை விநியோகிக்கும் விநியோகச் சங்கிலியை அடையாளம் காணமுடியவில்லை என காவல்துறை தெரிவித்தது.
செப்டெம்பர் 10 திகதி அன்று முன்சன்கிளப்பாக் நகரில் இரண்டு பல்பொருள் அங்காடியில் கொக்கேயின் பொதிகள் மறைத்து வைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டன.
அதேநாளில் அருகில் உள்ள நகரங்களான டியூஸ்பேர்க், கிறீபீட்ல், வியர்சன், ஹெயின்ஸ்பேர்க் மற்றும் நொயிஸ் ஆகிய நகரங்களில் கொகேயின் கண்டுபிடிக்கப்பட்டன.
விநியோகத்திற்கான சரியான பெறுநர் அல்லாமல் தறவாகப் பெற்றுள்ளனர் என்ற கோணத்தில் புலனாய்வாளர்கள் விசாரகணை ஆரப்பித்துள்ளனர் என முச்சன்கிளப்பார்க் காவல்துறையினர் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
யேர்மனியின் பல்பொருள் அங்காடிக்கான விநியோக களஞ்சிய இடத்திற்கு செல்வதற்கு முன்னர் தென்னமரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யானது. அத்துடன் பெல்ஜியம் ஆன்ட்வெர்ப் துறைமுகத்தை வந்தடைந்தாக காவல்துறையிர் நம்புகின்றனர்.
Post a Comment