இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் 492 பேர் பலி!! 1645 பேர் காயம்!!
லெபனானின் தெற்குப் பகுதிகளில் இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்குதல்களை இன்று திங்கட்கிழமை காலை முதல் நடத்தியுள்ளது.
காலை முதல் தெற்கு லெபனான், பெக்கா மற்றும் பால்பெக்கில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் இஸ்ரேலிய தாக்குதல்களின் விளைவாக 492 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் 34 குழந்தைகளும் 42 பெண்களும் அடங்குவதாகவும், 1645 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறுகிறது.
ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்களை விரிவு படுத்துவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
லெபனானின் பிரதம மந்திரி இஸ்ரேலின் நடவடிக்கைகள் "அழிப்புப் போர்" என்று கூறுகிறார்.
இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள இஸ்ரேலிய மக்கள் மீண்டும் அவர்களின் வீடுகளுக்குச் செல்லும்வரை தாக்குதல்கள் தொடரும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
ஹிஸ்புல்லாவின் தாக்குதல்களால் இஸ்ரேலின் வடக்குப் பகுதிகளிலிருந்து 60 ஆயிரம் இஸ்ரேலியர்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.
கடந்தவாரம் ஹிஸ்புல்லா போராளிகள் மீது பேஜர் மற்றும் வோக்கி டோக்கி தாக்குதல்கள் மூலம் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல் தற்போது நாடுகளுக்கான எல்லை தாண்டிய தாக்குதல்களை அதிகரித்துள்ளது.
Post a Comment