கென்யா நாட்டிடுப் பள்ளியில் தீ: 17 மாணவர்கள் பலி!


ஆபிரிக்க நாடான கென்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள்

உயிரிழந்துள்ளனர். மேலும் 14 மாணவர்கள் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஹில்சைட் எண்டராஷா அகாடமி பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்துள்கான காரணங்கள் இதுவரை தெரியவரவில்லை. இது குறித்து விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புக் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

No comments