உக்ரைனுக்கு 35 பில்லியன் யூரேக்கள்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு!


உக்ரைனுக்கு 35 பில்லியன் யூரோக்களை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் என ஐரோப்பிய ஆணையகத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அறிவித்தார்.

இன்று வெள்ளிக்கிமை உக்ரைனின் தலைநகர் கீவ்வுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்ட அவர் இந்த அவித்தலை விடுத்தார்.

உக்ரைனுக்கு நான் செல்லும் 8வது பயணம் என்றும், ரஷ்யாவின் படையெடுப்பு தீவிரமடையும் போது ஆதரவளிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

இந்த நிதி வான் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் உள்நாட்டு ஆயுதங்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் என்று கூறினார்.

வான் டெர் லேயனின் கெய்வ் விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட இந்த கடன் - கைப்பற்றப்பட்ட ரஷ்ய சொத்துக்களின் வருமானத்தைப் பயன்படுத்தி நிதி திரட்டும் G7 நாடுகளை உள்ளடக்கிய ஒரு பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். 

No comments