முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பலபல வசதிகள்
சந்திரிக்கா , மகிந்த ராஜபக்ச , கோட்டாபய மற்றும் மைத்திரபால ஆகிய முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாச ஆகியோரை பராமரிப்பதற்காக கடந்த மூன்று வருடங்களில் சுமார் 27 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
அவர்களை பராமரிக்க கடந்த 2022ஆம் ஆண்டில் 7 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் அது 8 கோடி ரூபாயாகவும் இவ்வாண்டில் 11 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது
இந்த முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முதல் பெண்மணிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் 45 வீத அதிகரிப்பு காணப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்காக இவ்வாண்டில் 1 கோடியே 56 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாயை ஒதுக்கியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்காக 2 கோடியே 91 இலட்ச 70 ஆயிரம் ரூபாயை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கும் பேராசிரியர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாசவுக்காக இவ்வாண்டில் 68 இலட்ச 20 ஆயிரம் ரூபாயை ஒதுக்கியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 273 வீத அதிகரிப்பை காட்டுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் 54 வீத அதிகரிப்பை காட்டுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஒதுக்கிய தொகையில் 329 வீத அதிகரிப்பை காட்டுவதாகவும் இதேவேளை, ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்காக இம்முறை வரவு செலவு திட்டத்தில் 660 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் அது 273 கோடி என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Post a Comment