கௌரவமாக வெளியேறும் ஆளுநர்கள்!
ஜனாதிபதியாக அனுரகுமார திசநாயக்க பொறுப்பேற்றுள்ள நிலையில் இதுவரை ஜந்து மாகாண ஆளுநர்கள் பதவி விலகியுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் தனது பதவி விலகல் கடிதத்தை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்திருந்தார்.
இதன்மூலம் பதவி விலகிய ஆளுநர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் தோல்வியை அடுத்து நான்கு ஆளுநர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
அதற்கமைய, வடமத்திய மாகாண ஆளுநர் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளில் இருந்து விலகியவர்களாவர்.
அத்துடன் ஊவா மாகாண ஆளுநரும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பான கடிதம் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோன்று தென் மாகாண ஆளுநர் நேற்று (22) தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் ஜவர் பதவி விலகி வருகின்ற போதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்கள் தமது பதவிகளில் நீடித்தே வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment