சீனா வாழ்த்து:இந்தியா அழைப்பு!



இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சீன அரசு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், அனுரவை டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தல் வெற்றியை தொடர்ந்து முதல் இராஜதந்திர சந்திப்பாக கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் சந்தோஸ் ஜா அநுரகுமாரவை நேற்று இரவு நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

அப்போதே பதவியேற்ற பின்னர் டில்லி வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி அநுரகுமாரவின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்திய விஜயம் அமையும் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன சார்பு நிலைப்பாட்டை உடைய ஜனாதிபதியென அனுர அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதும் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக அவர் டெல்லிக்கு பயணித்ததுடன் இந்தியாவுடன் நட்புறவை பேண முற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments