அனுரவே ஜனாதிபதி

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்கவே அடுத்த ஜனாதிபதி என்பது தெளிவாகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்
சமூக ஊடக பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளது.
நாங்கள் சஜித் பிரேமதாசவிற்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தோம் ஆனால் தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்த விதத்தில் அமையவில்லை.
அனுரகுமாரதிசநாயக்கவே இலங்கையின் அடுத்த ஜனாதிபதி என்பது தற்போது தெளிவாகின்றது.
ஜனநாயகத்தின் உணர்வின் அடிப்படையிலும் நல்லெண்ண அடிப்படையிலும் நான் அவரை தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
Post a Comment