ஈழ மண்:நல்லமண்!

 


தமிழீழ மண் எத்தகைய பயிரையும் வளரவிடும் அற்புதமானதென்பது அடிக்கடி வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.அவ்வகையில் யாழ்ப்பாணம் அராலி மத்தி முருகன் ஆலயத்திற்கு முன்பாக உள்ள வயல்வெளியில் பயிரிடப்பட்டுள்ள சூரியகாந்தி மலர் தோட்டமே இதுவாகும்.

தற்போது சூரியகாந்தி மலரினை பார்வையிட பலரும் வருகை தந்து புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்.  எவ்வாறு பயிரிடப்பட்டமை தொடர்பான தகவல்களை  அதனைப் பயிரிட்ட பட்டதாரி இளைஞனான விதுசன்  சோர்வின்றி விளக்கிவருகிறார்.

ஏதிர்வரும் காலம் சூரிய காந்தி எண்ணெய் தொழில் மேம்படுமென பலரும் நம்பிக்கை முன்வைத்துள்ளனர்.




No comments