கடலில் நீந்தியபோது மீட்டனராம்!
இலங்கை.இந்திய கடல் எல்லைப்பகுதியில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கச்சத்தீவு கடற்பகுதியில் இந்திய மீன்பிடி படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை இடம்பெற்றுள்ளது
விபத்தின் போது படகில் நால்வர் இருந்துள்ளதுடன் அதில் இருவர் காணாமல் போன நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை விபத்து இந்திய கடல் எல்லைக்கருகில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்னதாக இலங்கை கடற்படை படகால் மோதப்பட்ட நிலையில் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்திருந்தது.
பரஸ்பரம் இந்திய மீனவர்களதும் இலங்கை கடற்படையினதும் படகுகள் மோதிக்கொண்டதில் கடற்படை சிப்பாய் ஒருவரும் இந்திய மீனவர் ஒருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment