சிவன் வருகிறார் : பீதியில் சிஙகளம்!



முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று புதன்கிழமை (24) இடம்பெற்ற நிலையில் பூசகர் உள்ளிட பக்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை (23) அன்று கோவிலுக்கு சென்றிருந்த காவல்துறை இராணுவம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினரால் கோவில் பணிக்காக வருகை தந்த பூசாரி உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆலயத்தில் சிவன் சிலை பிரதிஸ்டை செய்வதாகவும் அது பல கோடி பெறுமதி எனவும் ஒரு வதந்தி கதையை பரப்பியுள்ளார்கள்.

எந்தவொரு புதிய சிலைபிரதிஸ்டை செய்வதும் நடைபெறமாட்டாது. தயவுசெய்து வதந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்பதை ஆலய பூசகர் என்ற வகையில் தெரியப்படுத்த விரும்புகின்றேன்." என்றார்

எனினும் புதிய சிவலிங்க பிரதிஸ்டை தொடர்பில் தென்பகுதியை சேர்ந்த பலர் முகநூலில் வதந்தி பரப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் . 

 

No comments