சீன வீடு வேண்டாம்:போர்க்கொடி!



வடக்கு கிழக்கு மாகாணங்களில் சீன அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள பொருத்து வீட்டுத்திட்டத்தின் கீழ், வீடுகள் அமைப்பதற்கான பொருட்கள் எடுத்து வரப்பட்டுள்ளன.

இதனிடையே சீன அரசின் பொருத்து வீட்டு திட்டம் வடக்கிழக்கு மீனவர்களுக்கு வேண்டாம் எனவும் நிரந்தர வீட்டு திட்டத்தினை மீனவர்களுக்கு வழங்குமாறும் மீனவ அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொருத்து வீட்டு திட்டம் எமக்கு உகந்தது அல்ல. நாங்கள் கடற்கரையினை அண்டிதான் வாழ்ந்து வருகின்றோம். 

இயற்கை அனர்தங்களுங்கு அஞ்சி வாழ வேண்டிய சூழல் ஏற்படும் .ஆகவே எங்களுக்கு பொருத்தமற்ற வீட்டு திட்டங்களை முற்றிலும் நிராகரிக்கின்றோம். 

கடற்றொழிலாளர்களாகிய எமக்கு நிரந்தரமான வீட்டுத்திட்டம் அனைவரும் ஏற்றுக் கொள்ள கூடிய வகையில் பாதிக்கப்பட்ட அனைத்து கடற்றொழிலாளர்களுக்கும் அவர்களுக்கு வழங்கவேண்டும்.

வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு சீன அரசு உதவி வழங்குகின்றது என சொல்லுகின்றனர். ஆனால் அத்தகைய உதவிகள் மிகக்குறைவானோருக்கே வழங்கப்படுவதாகவும் உள்ளுர் மீனவ அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.


No comments