அறளைக்கதை-தேர்தல் வேண்டாம்:சிவி
ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா இல்லையாவென்ற இழுபறிகள் மத்தியில் தேர்தல் பிற்போடப்பட்டால் நாட்டிற்கு நன்னை கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் அமைப்பது நாட்டுக்கு நல்லது ஆனால் தமிழ்க் கட்சிகள் தேசிய அரசாங்கத்தில் இணைவது பொருத்தமானதல்ல.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கக்கூடிய தேசிய அரசாங்கத்தை தமிழ் கட்சிகள் ஒன்றிணைக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
அத்தோடு தற்போது தேர்தல் நடைபெற்றால் எந்த வேட்பாளரும் 50விழுக்காடு வாக்குகளைப் பெற முடியாது. பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு நிலையான ஆட்சி அமைய வேண்டும்.
ஆனால் தற்பொழுது தேர்தல் நடைபெற்று குறுகிய காலத்தில் ஆட்சி மாறினால் பாரிய பிரச்சினை ஏற்படும். நாட்டில் இன்னொரு பிரச்சினை ஏற்பட்டால், நாட்டை மீட்க முடியாது.
மக்களின் பாதுகாப்பு தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டும். ஆகவே தேர்தலைப் பிற்போட வேண்டும் என்பதே எனது கருத்து“ என சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment