மன்னார் விபத்து: இளம் குடும்பஸ்தர்பலி!


மன்னார்- முருங்கன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முருங்கன் தொடருந்துக் கடவை பகுதியில்  பேருந்தும் உந்துருளியும் மோதியதில் உந்துருளியில் பயணித்த இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதாக தெரிய வருகிறது.  

குறித்த விபத்து திங்கட்கிழமை (24) மாலை 5 மணி அளவில்  இடம் பெற்றுள்ளது.

மன்னாரில் இருந்து சென்ற தென் பகுதியை சேர்ந்த தனியார் பேருந்தும், வவுனியா பகுதியில் இருந்து முருங்கன் வீதி நோக்கி வந்த உந்துருளியும் முருங்கன்- கற்கிடந்தகுளம் கிராமத்திற்கும் இடையில் உள்ள  தொடருந்துக் கடவைப் பகுதியில்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் உந்துருளியில் பயணித்த நபர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்

மரணமடைந்தவர் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள சாளம்பன் நாக செட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் தீபன்   (வயது-35) இளம் குடும்பஸ்தர் என  தெரிய வருகிறது.

சடலம் முருங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments