மோடி வருகிறார்:புகைப்படமெடுக்க அனுமதி!



வட இலங்கையின் மன்னார் தீவு உள்ளிட்ட பல இடங்களில் ஆளில்லா விமானக் கமெராக்களை பயன்படுத்தி படமெடுப்பதற்கு இந்தியா அனுமதி கோரியுள்ளமை சர்ச்சை தோற்றுவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்ட கோரிக்கை கடிதம் தற்போது பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மன்னாரின் மணல் திட்டுகள், மற்றும் நெடுந்தீவு உள்ளிட்ட எட்டு பிரபலமான இடங்களில் ஆளில்லா விமானக் கமெராக்களை பயன்படுத்தி படமெடுக்க அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகின்றது.

இதனிடையே இந்திய மக்களவைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது, கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பிய பிரதமர் மோடியை இந்திய காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.

கச்சதீவு விவகாரம் இலங்கையுடனான இந்தியாவின் உறவை சீர்குலைத்துவிடும்.

அவ்வாறு பாரிய அச்சத்தை உருவாக்கியமைக்காக பிரதமர் மோடி மற்றும் அவரது தரப்பினர் மன்னிப்பு கேட்கத் தயாரா எனவும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.


No comments