யாழில் 22 கிலோ கேரளா கஞ்சா மீட்பு


யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 22 கிலோ கேரள கஞ்சா பொலிஸாரினால் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 10 பொதிகளில் பொதி செய்யப்பட்ட  22 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

கைப்பற்ற கஞ்சாவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பாரபப்டுத்த நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார், சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments