சுவீடனில் இஸ்ரேலிய தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு


சுவீடனில் இஸ்ரேலியத் தூதரகத்திற்கு அருகே இன்று வெள்ளிக்கிழமை காலை துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் செவிமடுக்கப்பட்டது. 

இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகாமையில் சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதை அடுத்து, ரோந்துப்  படையினர் இன்று வெள்ளிக்கிழமை ஸ்டாக்ஹோமில் ஒரு பகுதியை சுற்றி வளைத்தனர்.

ஸ்டாக்ஹோமில் உள்ள இஸ்ரேலின் தூதரகத்திற்கு அருகே சந்தேகத்திற்குரிய துப்பாக்கிச் சூடு காரணமாக, நாடு முழுவதும் உள்ள இஸ்ரேலிய மற்றும் யூத சொத்துக்கள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்று சுவீடன் காவல்துறை தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது. 

மத்திய ஸ்டாக்ஹோமில் நோபல் பூங்காவிற்கு அருகிலுள்ள பல தூதரக கட்டிடங்களைக் கொண்ட ஒரு பகுதியில் நடந்ததாகக் கூறியது.

முதற்கட்ட தடயவியல் விசாரணைகள் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளிக்கிழமை அதிகாலை பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 


No comments