யேர்மனி டுசில்டோர்ப்பில் தீ விபத்து: 3 பேர் பலி! 16 பேர் காயம்!!


யேர்மனியில் வெஸ்ட்பாலியா மாநிலத்தின் தலைநகரான டுசில்டோர்வ் பகுதியில் பாரிய வெடிப்பினால் ஏற்பட்ட தீ விபத்தால் மூன்று ஆண்கள் கொல்லப்பட்டனர். மேலும் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

நேற்று வியாழக்கிழமை இந்த அனர்த்தம் ஏற்பட்டது. ஆறு மாடி கட்டிடத்தில் தரைப்பகுதியில் உணவகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டது. இந்த வெடிப்பில் அருகில் உள்ள வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து கட்டிடத்தில் பல்கணியில் இருந்தவர்களை மீட்டனர். அத்துடன் 70க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 9 மணி நேர போராட்டத்தின் பின்னர் தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்த தடயங்களைத் தேடும் பணியில் தீயணைப்பு நிபுணர்கள் இப்போது தளத்தை ஆய்வு செய்து வருகின்றனர். நகரப் பணியாளர்கள் தற்காலிகமாக கட்டிடத்திற்கு எரிவாயுக் கம்பியை மூடினார்கள்.

போக்குவரத்து நொிசல் உள்ள இப்பகுதிகள் அனைத்தும் மூடப்பட்டன. இக்கட்டிடத்தின் முன் தரித்து நிறுத்தப்பட்ட மகிழுந்துகளும் எரிந்த நிலையில் காணப்படுகின்றன.

No comments