வவுனியாவில் கஞ்சாவுடன் இளைஞன் கைது


வவுனியாவில் 5 கிலோகிராம் கஞ்சவுடன் நபர் ஒருவரை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்

வவுனியா புளியங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை ஒன்றை நடாத்திய அதிரடிப்படையினர் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வைத்து நேற்று இரவு 5 கிலோ 124 கிராம் உடைய கஞ்சா போதைப்பொருளை மீட்டுள்ளனர்

அது தொடர்பில் வவுனியா செக்கட்டிப்பிளவு பகுதியை சேர்ந்த 26 வயதுடை இளைஞனை கைது செய்துள்ளனர்.  மேலதிக விசாரனைகளின் பின்னர் கைது செயப்பட்ட நபரை வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

No comments