ஜனாதிபதிக்கும் பெசிலுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பெசில் ராஜபக்ஷவுக்கும் இடையில்  கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. 

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு இடையில் அண்மையில் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமானதுடன் இது அரசியல் அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் இன்றைய தினம் பெசில் ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது 


No comments