நைஜீரியாவில் கனமழை: சிறையிலிருந்து 118 கைதிகள் தப்பியோட்டம்!!


நைஜீரியாவில் நேற்றுப் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் சிறையிலிருந்து 118 கைதிகள் தப்பிச் சென்றனர்.

பல மணி நேரம் பெய்த கனமழையால் தலைநகர் அபுஜாவிற்கு அருகில் உள்ள சுலேஜா சிறை மற்றம் அருகில் இருந்த கட்டிடங்கள் மற்றும் பாதுகாப்புச் சுவரில் அழிவு ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அங்கிருந்த கைதிகள் தப்பியோடினர்.

தப்பியோடிய கைதிகளில் 10 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர். மேலும் அனைத்து கைதிகளும் மீண்டும் காவலில் வைக்கப்படும் வரை அதிகாரிகள் தொடர்ந்து தேடுவார்கள் என சிறை சேவை செய்தித் தொடர்பாளர் அடமு துசா இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

கடந்த ஜூலை 2022 இல் இஸ்லாமிக் ஸ்டேட் என்று அழைக்கப்படும் அமைப்பில் இருந்தவர்கள் அபுஜாவில் உள்ள உயர் பாதுகாப்பு சிறை மீது தாக்குதல் நடத்தியபோது ஒரே ஒரு சம்பவத்தில் சுமார் 600 பேர் சிறையிலிருந்து தப்பி ஓடியிருந்தமையும் இங்கே நினைவூட்டத்தக்கது.

No comments