வேல்ஸ் பாடசாலையில் கத்திக்குத்து: மூவர் காயம்!!


வேல்ஸின் அமன்போர்ட்டில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்த நிலையில், கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் கத்தியும் மீட்கப்பட்டது.

அம்மன்ஃபோர்டில் உள்ள Ysgol Dyffryn Aman இல் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவர் ஒருவரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

இக்கத்திக்குத்துச் சம்பவம் நேற்று புதன்கிழமை காலை 11:20 நடந்தது. கார்மர்தன்ஷையர் பள்ளியில் மாணவர்கள் சுமார் நான்கு மணிநேரம் வகுப்பறைகளில் அடைக்கப்பட்டனர். பிற்பகல் 3.20 மணியளவில் பள்ளியிலிருந்து மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளை அழைத்துச் செல்ல பாடசாலையின் வெளியே கூடினர்.

சம்பவம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட இளம்பெண் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இப்பள்ளியில் 11 முதல் 18 வயதுக்குட்பட்ட 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்வி கற்கின்றனர்.

No comments