நீந்திகக் கடந்த நெருப்பாறு:ஆபத்தானதாம்!



தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் கேள்விக்குள்ளாகியே வருகின்றது.

இந்நிலையில் நூல் வெளியிட்டு நிகழ்வொன்றில் பங்கெடுத்தமை தொடர்பில் எழுத்தாளர் தீபச்செல்வனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இன்று (11.04.2024) விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றை ஏற்பபாடு செய்தமைக்காக தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவரான தீபச்செல்வனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதனின் 34 நாட்களில் நீந்திகக் கடந்த நெருப்பாறு என்ற புத்தகம் எழுத்தாளர் தீபச்செல்வன் தலைமையில் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

புத்தக வெளியீடு தொடர்பாக இன்று விசாரணை இடம்பெற்றதாக தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த புத்தகம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் நோக்கில் எழுதப்பட்டதா என்றும் விசாரணையின் போது கேட்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

கிளிநொச்சியின் மூத்த எழுத்தளார் நா. யோகேந்திரநாதனை மதிப்பளிப்பு செய்யும் நோக்கிலேயே வெளியீட்டு விழா நடத்தப்பட்ட போதிலும் இறுதி யுத்த அவலங்களை அம்பலப்படுத்தியே நூல் எழுதப்பட்டுள்ளது. இன்று காலை 11மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட விசாரணை சுமார் இரண்டரை மணிநேரத்திற்கும் மேலாக இடம்பெற்றள்ளது.


No comments