போதகர் கொடுத்த நீரை அருந்திய பெண் உயிரிழப்பு


மதுரங்குளிய பொலிஸ் பிரிவில் தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற ஆராதனையின் போது, போதகர் கொடுத்த நீரை அருந்தி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

சிலாபம் பிரதேசத்தில் வசித்து வந்த 58 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த பெண்ணுக்கு நீண்ட நாட்களாக இதயநோய் மற்றும் சளி பாதிப்பு இருந்துள்ளது. இதனை குணப்படுத்துவதற்காக அந்த பெண்ணினால் கொண்டுவரப்பட்ட நீரை போதகர் பிரார்த்தனை செய்து அதனை குடிக்க கொடுத்த போது , அதனை வாங்கி அருந்திய பெண் நோய் வாய்ப்பட்டுள்ளார். 

அதனை அடுத்து அவரை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்த வேளை , அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் 

No comments