நைஜீரியாவில் கடத்தப்பட்ட 280 பள்ளி மாணவர்கள்!!


நைஜீரியாவின் வடமேற்கே உள்ள பள்ளி ஒன்றில் கல்வி பயின்ற 280க்கு மேற்பட்ட மாணவர்கள் துப்பாக்கி முனையில் ஆயுதம் ஏந்திய நபர்களால் கடத்தப்பட்னர்.

நைஜீரியாவில் பணத்திற்காக பள்ளி மாணவர்கள் அடிக்கடி கடத்தப்படுவது வழக்கமான நிகழ்வாகும்.

கடுனா மாநிலத்தில் அமைந்துள்ள குரிகா பள்ளியில் இக்கடத்தல் சம்பவம் நேற்று வியாழக்கிழமை நடந்தது. இதனை அப்பளியில் கடமையாற்றும் ஆசிரியரான சானி அப்துல்லாஹி மற்றும் குடியிருப்பாளர்கள் உறுதி செய்துள்ளனர். எனினும் கடத்தப்பட்ட மாணவர்களின் சரியா எண்ணிக்கை எவரும் தெரியவில்லை.

துப்பாக்கி ஏந்தியவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட போது பல மாணவர்கள் பள்ளி ஊழியர்களுடன் தப்பிச் சென்றதாக சானி அப்துல்லாஹி கூறினார்.

ஒவ்வொரு குழந்தையும் திரும்பி வருவதை நாங்கள் உறுதி செய்வோம். நாங்கள் பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என கடுனா மாநில ஆளுநர் உபா சானி செய்தியாளர்களிடம் கூறினார்.

சில நாட்களுக்கு முன்னர் வடகிழக்கு நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் உள்ள தொலைதூரப் பகுதியில் பல பெண்கள் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டனர்.

கடந்த செப்டம்பரில், ஜம்ஃபாரா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் இருந்து 30க்கும் மேற்பட்டவர்களை துப்பாக்கிதாரிகள் கடத்திச் சென்றனர். 

2021 ஆம் ஆண்டு ஜம்ஃபாராவில் உள்ள ஜாங்கேபே நகரில் உள்ள பெண்கள் உறைவிடப் பள்ளியில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கடத்தப்பட்டனர் என்பது நினைவூட்டத்தக்கது.

No comments