ரஷ்யாவுக்காக போராட குடிமக்களை அனுப்பும் வலையமைப்பில் பலர் கைது!!


உக்ரைனில் ரஷ்யாவுக்குப் போராட இந்தியர்களை அனுப்பிய கடத்தல் வலையமைப்பின் உறுப்பினர்களை இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவு

அதிகாரிகள் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

13 இடங்கள் சோதனை நடத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். 

ஒரு பெரிய கடத்தல் கும்பல் வெளிநாட்டில் இலாபகரமான வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாக வாக்குறுதியுடன் ஏமாற்றும் இளைஞர்களை குறித்து வைத்து நாடு முழுவதும் செயற்படும் ஒரு பெரிய மனித கடத்தல் கும்பல் மீது சோதனை நடத்தப்பட்டன.

இந்த கடத்தல்காரர்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பாக செயல்பட்டு, சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும், அவர்களது உள்ளூர் தொடர்புகள், முகவர்கள் மூலமாகவும் ரஷ்யாவில் அதிக ஊதியம் பெறும் வேலைகளுக்காக இந்தியக் குடிமக்களை கவர்ந்து வருகின்றனர்.

கடத்தப்பட்ட இந்திய குடிமக்கள் ரஷ்யாவில் போர்ப் பயிற்சி பெற்றனர். அவர்களின் விருப்பத்திற்கு எதிராக ரஷ்யா - உக்ரைனின் போர்க் களங்களில் போராட நிறுத்தப்பட்டனர் என்று இந்திய மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்தது.

சுமார் 35 இந்தியர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்ட சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட சிலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இராணுவத்தில் உதவியாளர்களாக எதிர்பார்த்து ரஷ்யா சென்றவர்களில் குறைந்தது இருவர் இறந்துள்ளனர் என அவர்களின் குடும்பங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் அந்த மரணங்களில் ஒருவரை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய குடிமக்கள் அனைவரும் உரிய எச்சரிக்கையுடன் செயல்படவும், இந்த மோதலில் இருந்து விலகி இருக்கவும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

உக்ரைன் மீதான தனது போரைத் தொடர்வதால், மேலும் படையினரை ஈர்க்கும் உலகளாவிய தேடலில் ரஷ்யா உள்ளது.

இந்தியா ரஷ்யாவின் நீண்டகால நட்பு நாடாகும், மேலும் அதன் அண்டை நாடு மீதான அதன் தொடர்ச்சியான படையெடுப்பு குறித்து ரஷ்யாவைக் கண்டிக்க மறுத்துள்ளது. இராஜதந்திரத்தின் மூலம் மோதலை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பினரையும் வலியுறுத்துகிறது.

கடந்த மாதம், நேபாளம் தனது குடிமக்களுக்கு ரஷ்யா மற்றும் உக்ரைனில் பணிபுரிய அனுமதி வழங்குவதை நிறுத்தியது. மேலும் அறிவிப்பு வரும் வரை ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய பல நேபாள வீரர்கள் கொல்லப்பட்டனர்.

No comments