ரணில் பரந்துபட்ட கூட்டு!



ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்காக ரணில் தனது காய்களை நகர்த்த தொடங்கியுள்ளார்.ஷ

வடகிழக்கில் தமிழ் கட்சிகளுடன் திரைமறைவு பேச்சுக்களை நடாத்திவருகின்ற ரணில் மறுபுறம் மைத்திரி தரப்பினை நோக்கி நகர்த்தல்களை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் சுதந்திர கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் இந்த வார இறுதியில் கொழும்புக்கு அழைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், கட்சியின் அனைத்து அமைப்புகளின் பொறுப்பாளர்களும் மிக முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திரக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படவுள்ளதாகவும், அதன் செயற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும்;, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இந்த புதிய கூட்டணி அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே மறுபுறம் மீண்டும் மைத்திரியை அச்சமூட்டி முடக்க ராஜபக்ச தரப்பு முற்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் பற்றிய மைத்திரியின் கருத்தை முன்னிறுத்தியே காய் நகர்த்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 



No comments