சாந்தன் நினைவேந்தல் ஏற்பாடு.அரவிந்தன் கைது!



தமிழக சிறையில் மரணமடைந்த சாந்தனின் நினைவு நிகழ்வொன்றிற்கான முன்னேற்பாடுகளை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்து வந்திருந்த நிலையில் முன்னாள் போராளி அரவிந்தன் கைதாகியுள்ளார்.சாந்தனின் புகழுடலுடனான இறுதி ஊர்வலத்தை வடக்கில் முன்னெடுப்பதிலும் அவர் இணைந்து பயணித்திருந்தார்.

போராளிகள் நலன்புரி சங்க தலைவரான செ. அரவிந்தனே இலங்கை பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் முகப்புத்தக பதிவு தொடர்பில் கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்ட போதிலும் அவர் விசாரணைக்கு செல்லாத நிலையில் செவ்வாய்க்கிழமை (26) மீண்டும் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்கு சென்ற சமயமே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளதுடன்  அவரை கொழும்பு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள் உருவாக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்ததாக அரவிந்தன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.


No comments