டக்ளஸ் சார்பு நாரா :திருட்டு மண்வியாபாரத்தில்!

 


கிளிநொச்சி பூநகரியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் பாரிய சட்டவிரோத மணல் அகழ்வின் பின்னணியில் டக்ளஸ் சார்பு நாரா கடற்றொழில் சார் நிறுவன உத்தியோகத்தர்கள் சிலர் உள்ளமை அம்பலமாகியுள்ளது.

அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பது போன்று திரிய அவரது கட்சியை சேர்ந்த முக்கியஸ்தரும் கடல்சார் நிறுவன உத்தியோகத்தருமான ஒருவரே மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

இதனிடையே புத்தூர் பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் மீது, இன்றைய தினம் காலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. 

சட்டவிரோத மணலுடன் , டிப்பர் வாகனமொன்று வேகமாக பயணிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் , புத்தூர் பகுதியில் வைத்து டிப்பர் வாகனத்தை வழிமறித்துள்ளனர். 

இதற்கமைய, டிப்பர் சாரதி வாகனத்தை நிறுத்தாது சென்றமையால் , வாகனத்தின் மீது  துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் குடைசாய்ந்தது. 


No comments