ஜோர்டான் ட்ரோன் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி


ஈராக் மற்றும் சிரியாவில் ஈரானிய ஆதரவு குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா ஒரே இரவில் வான் தாக்குதல்களை நடத்தியது.

குறைந்தது 85 இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைத் தலையகம் கூறியுள்ளது.

85 இலங்குகள் மீது 125க்கும் மேற்பட்ட துல்லியமான வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக மெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைத் தலையகம் சென்றகொம் மேலும் கூறியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர் மேலும் 34 படையினர் காயமடைந்தனர்.

இத்தாக்குதல்களுக்குப் பின்னால் ஈரான் இருப்பதாக அமெரிக்க அமெரிக்க அதிபர் ஜோ பிடன் குற்றம் சாட்டினார். இக்குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று ஈரான் கூறியது.

இதற்குப் பதிலடியாகவே இத்தாக்குதல்களை அமெரிக்கா நடத்தியது.

அமெரிக்க அதிபரின் பதில்

தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின் இத்தாக்குதல்களை நானே வழிநடத்தினேன் என்று கூறிய பிடன், ஒரு அமெரிக்கனுக்கு தீங்கு விளைவித்தால் நாங்கள் பதிலளிப்போம் என்று எச்சரித்தார்.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் 

ஒரு பரந்த மோதலைத் தவிர்க்க அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றும் ஆனால் தன்னையும் தனது மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறினார்.

சிரியாவின் பதிலளிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மோதலை தூண்டி வருவதாக சிரியா குற்றம் சாட்டியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள இலக்குகள் மீது ஒரே இரவில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு சிரியாவின் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராணுவப் படைகள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் மற்றும் பிராந்தியத்தில் மோதலைத் தூண்டுகின்றன என்பதை மீண்டும் நிரூபித்துள்ளன என்று கூறியது.

சிரியப் பிரதேசத்தில் அமெரிக்காவின் 'ஆக்கிரமிப்பு' தொடர முடியாது என்று சிரியா கூறுகிறது. ஈரானியப் படைகள் மற்றும் ஈராக் மற்றும் சிரியாவில் நேச நாட்டுப் போராளிகளுக்கு எதிரான அமெரிக்கத் தாக்குதல்களுக்கு டமாஸ்கஸ் பதிலடி கொடுத்தது.

அமெரிக்கத் தாக்குதல்களில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று சிரிய இராணுவம் கூறுகிறது. அத்துடன் தனியார் மற்றும் பொதுமக்களின் சொத்துக்களும் சேதமடைந்துள்ளது என சிரிய இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஈராக்கின் பதிலளிப்பு

அமெரிக்காவின் தாக்குதல்கள் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும். ஈராக்கின் இறையாண்மையை மீறல் செயல் எனவும்  ஈராக் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதல்களின் விளைவாக நாட்டில் பொதுமக்கள் உட்பட குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 25 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஈராக் அரசாங்கம் கூறுகிறது.

அமொிக்காவின் தாக்குதல்கள் ஈராக் மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பேரழிவு தரும் விளைவுகளை கொண்டு வரும் என்று ஜெனரல் யெஹியா ரசூல் மேலும் கூறுகிறார்.

ஈரானின் பதில்

அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்கள் இறையாண்மைக்கு எதிரானது என ஈரானின் வெளியுறவு அமைக்கத்தின் பேச்சாளர் நாசர் கனானி கண்டனம் தெரிவித்தார்.

மெரிக்காவின் மற்றொரு சாகச மற்றும் மூலோபாய தவறை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, இது பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மையை அதிகரிக்கும் பதற்றத்தை மட்டுமே விளைவிக்கும் என்று அவர் கூறுகிறார்.

பிரித்தானியா பதில்

தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் அமெரிக்காவின் உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம் என இங்கிலாந்து அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் "உறுதியான நட்பு நாடுகள்" என்று அழைத்தார்.

அமெரிக்காவின் செயல்பாடுகள் குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க மாட்டோம். ஆனால் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று மேலும் கூறினார்.

No comments