ஈராக்கில் அமெரிக்கா தாக்குதல்: ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்!!
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் புதன்கிழமை இரவு அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் மகிழுந்து மீது நடத்திய தாக்குதலில் ஈரானின் ஆதரவு போராளிகள் மூத்த உறுப்பினர் கொல்லப்பட்டார்.
லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்மட்டத் தளபதியான முஹம்மது சபீர் அல்-சாதி என்பவர் கொல்லப்பட்டார் என செய்திகள் கூறுகின்றன.
கடந்த மாதம் ஜோர்டானில் மூன்று அமெரிக்கா வீரர்களைக் கொன்ற இராணுவத் தளத்தின் மீதான தாக்குதலை திட்டமிட்டு நடத்திய பொறுப்பாளர் என கூறப்படுகிறது.
இவர் சிரிய அரசாங்கத்திற்கு ஆதரவாக இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பின் பொறுப்பான தளபதி இருந்தார்.
அல்-சாதியின் மரணம் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகளின் இரு அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டது.
ஈராக் அரசாங்கம் இந்தத் தாக்குதலைக் கண்டித்தது. இது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான 'விரோத மீறல்' என்று ஈராக் கூறியது.
கடந்த மாதம் ஜோர்டானில் மூன்று அமெரிக்க வீரர்களைக் கொன்ற ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, கிழக்கு பாக்தாத்தில் உள்ள மாஷ்டல் சுற்றுப்புறத்தில் ஒரு முக்கிய பாதையில் துல்லியமான தாக்குதல் அமெரிக்கப் படைகளின் சமீபத்திய பதிலடி நடவடிக்கையாகும்.
Post a Comment