நைல் நதியில் படகு மூழ்கியதில் 10 பேர் பலி!!
எகிப்தில் நாளாந்த கூலித் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற படகு கெய்ரோ அருகே நைல் நதியில் மூழ்கியது. இதில் 10 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மீட்பு நடவடிக்கையின்போது இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 5 பேர் உயிர் பிழைத்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை கெய்ரோ அருகே நைல் நதியில் 15 பேரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
படகில் இருந்த பயணிகள் அனைவரும் உள்ளூர் கட்டுமான நிறுவனத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த கூலித் தொழிலாளர்கள் ஆவர்.
Post a Comment