சுவீடனின் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காவில் பெரும் தீ விபத்து


சுவீடனின் மேற்கு நகரமான கோதென்பேர்க்கில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் திங்கட்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

கோதென்பேர்க்கின் லிஸ்பெர்க் கேளிக்கை பூங்காவில் புதிதாக சேர்க்கப்பட்ட ஓசியானா வோட்டர்பார்க்கில் தீப்பிடித்தது. இங்கு பார்வையாளர்கள் யாரும் இல்லை. அதனால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

வோட்டர் பார்க்குடன் இணைக்கப்பட்ட விடுதி மற்றும் அலுவலகங்களில் இருந்தவர்களை் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

வோட்டர்ப்பார்க் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அப்பகுதி மக்களை வீட்டுக்குள் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டனர்.

நீர் சாவாரிப் புதியில் முதலில் தீப்பிடித்தாக பூங்கா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தீப்பிடித்த சம்பவத்தை அடுத்து பல தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டன.

கோட்போர்க் நகரத்தில் உள்ள லிஸ்பெர்க், 1923 இல் திறக்கப்பட்டது. ஆண்டுக்கு சுமார் 3 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்ட பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.





No comments