மலேசியாவில் 100 ஏதிலிகள் தப்பியோட்டம்!!
மலேசியாவில் உள்ள குடியேற்ற மையத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்தவர்கள் தப்பியோடியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ரோஹிங்கிய ஏதிலிகள் என தெரிவந்துள்ளது.
வெளியேறிய ஏதிலிகளில் ஒருவர் சாலை விபத்தில் கொல்லப்பட்டார்.
லேசியாவின் மேற்கு பேராக் மாநிலத்தில் உள்ள பிடோர் குடியேற்ற மையத்தில் இருந்து மொத்தம் 131 பேர் தப்பியோடிவிட்டனர் என்று குடிவரவுத்துறை இயக்குநர் ஜெனரல் ரஸ்லின் ஜூசோ இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓடியவர்களில் 115 ரோஹிங்கிய எதிலிகளும் அடங்குவர். ஏனையவர்கள் அனைவரும் மியான்மர் நாட்டினர்.
எதிலிகள் தடுப்பு மையத்தில் ஒரு கலவரம் வெடித்தபோது புலம்பெயர்ந்த ஆண்கள் அனைவரும் தப்பினர். அவர்களைத் தேடுவதற்காக சுமார் 400 பணியாளர்கள் அனுப்பப்பட்டனர்.
ரோஹிங்கியா முஸ்லிம் இன சிறுபான்மையினர். அவர்கள் முக்கியமாக மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் வாழ்கின்றனர்.
2017 இல் நூறாயிரக்கணக்கானோர் இராணுவப் படுகொலைகள் மற்றும் துன்புறுத்தலில் இருந்து அண்டை நாடான வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்றனர்.
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும், வசதி படைத்த மலேசியாவிற்குத் தப்பிச் செல்வதையே பலர் விரும்புகின்றனர்.
அண்மைய காலங்களாக ரோஹிங்கியா அகதிகளின் படகுகளைத் திருப்பி அனுப்பப்பட்டன.ஆயிரக்கணக்கானவர்களை நெரிசலான தடுப்பு மையங்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.
மலேசியா அகதி அந்தஸ்தை அங்கீகரிக்கவில்லை. மேலும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை அடிக்கடி ஒடுக்கு வருகிறது.
100,000 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் மலேசியாவில் வசிப்பதாக நம்பப்படுகிறது. அவர்கள் ஊதியம் பெறும் வேலைகளில் சட்டவிரோதமாக வேலை செய்கிறார்கள்.
Post a Comment