யாழில். 15 கிலோ கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது


யாழ்ப்பாணத்தில் 15 கிலோ கஞ்சா போதைப் பொருளுடன் நபர் ஒருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  கைது செய்யப்பட்டுள்ளார். 

போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்து , அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலையே கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 

No comments