கோத்தபாய எனது தலைவனல்ல:கருணா!

 


கோட்டாபாய ராஜபக்சவை தான் என்றுமே தனது தலைவராக ஏற்கவில்லையென கருணா என்றழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் தேர்தல்களத்தில் குதிக்க அம்பாறையிலிருந்து மட்டக்களப்பிற்கு கருணா இடம்மாறியுள்ள நிலையிலேயே கோட்டபாய குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

ஆணவம் பிடித்து செயற்பட்டமையினாலேயே இன்று கோட்டபாய வீதிக்கு வரும்  நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, கோட்டாபய ராஜபக்சவை என்றுமே தாம் அரசியல் தலைவராக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வேறு வழி இல்லாமல் மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டமைக்கு இணங்கியே ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயவிற்கு ஆதரவாக செயற்பட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பிள்ளையான் பிரதேசவாதம் கொண்ட கருத்துக்களை வெளியிடுவதை தாம் ஏற்கப்போவதில்லை என்றும் அரசியல் ரீதியாக மேலும் முதிர்ச்சியடைய வேண்டிய நிலைகள் காணப்படுகின்றதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு வருகை தந்திருந்த வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்களை பிரதேச வாதத்தை முன்னிறுத்தி பிள்ளையான் கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments