கச்சதீவிற்குவரமாட்டோம்:தமிழக யாத்திரீகர்கள்!

 


யாழிலிலுள்ள இந்திய துணை தூதரகத்தை முடக்கி நேற்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு இந்திய யாத்திரீகர்கள் பங்கெடுக்கப்போவதில்லையென அறிவித்துள்ளனர்.

அவ்வகையில் எதிர்வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருவிழாவை இரத்து செய்வதாக கச்சத்தீவு புனித பயண ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்கு தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில் விசைப்படகு கடற்றொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக திருப்பயணிகளை அழைத்துச் செல்ல முடியாதுள்ளது.அதனால் கச்சத்தீவு திருவிழா இரத்து செய்யப்படுவதாகவும், விழாவில் இந்திய பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

அதேவேளை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மூன்று தமிழக கடற்தொழிலாளர்களுக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்ற தீர்ப்பளித்ததை கண்டித்தும் நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக இரத்து செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்துள்ளதுடன் தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments