நீர்மூழ்கி கப்பல் நல்லெண்ண விஜயம் !



இறுதி யுத்த காலப்பகுதியினில் விடுதலைப்புலிகளது ஆயுத கப்பல்களை மூழ்கடிக்க உதவிய இந்திய நீர்மூழ்கிக்கப்பல் இலங்கைக்கு மீண்டும் வந்துள்ளது.

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான INS Karanj இன்று நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு கடற்படை சம்பிரதாயங்களுக்கமைய இலங்கை கடற்படையினர் வரவேற்பளித்துள்ளனர்.

INS Karanj நீர்மூழ்கி கப்பலானது தளபதி அருணாப் தலைமையில் 53 பேருடன் வருகைத்தந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின்போது, இலங்கை கடற்படையினர் இந்திய படையினருடன் நீர்மூழ்கிக் கப்பல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளன

No comments